அவதூறு வேண்டாம்..
புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள், செய்திகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின்றன. குறிப்பாக வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்பாகங்கள் எனக்கூறி போலி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது குறித்து சிஆர்பிஎப் வெளியிட்ட அறிக்கை: நாங்கள் ஒற்றுமையாக இருக்கும் நிலையில், பிரிவினை ஏற்படுத்தும் வகையில், சில சமூக விரோதிகள், வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்பாகங்கள் என போலி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தயவு செய்து யாரும் இதுபோன்ற புகைப்படங்கள் மற்றும் செய்திகளை பகிர வேண்டாம். யாருக்கும் அனுப்ப வேண்டாம். இது குறித்து webpro@crpf.gov.in என்ற இமெயில் முகவரியில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.
Categories:
Uncategorized