இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.

    வெள்ளத்திற்குப் பிறகு கொசுக்களால் பரவும் நோய்களை எதிர்த்துப் போராட இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது.  வெள்ள நெருக்கடிக்குப் பிறகு இந்தியாவிடமிருந்து 6.2 மில்லியன் கொசுவலைகளை வாங்க பாகிஸ்தான் தயாராக உள்ளது.  பாகிஸ்தான் அரசு இந்த முடிவுக்கு செவ்வாய்க்கிழமை (அக். 11) அன்று ஒப்புதல் அளித்தது. நாட்டில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்குக்குப் பின்னர், கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “நாட்டின் 32 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மலேரியா வேகமாக பரவி வருகிறது, அங்கு ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொசுக்களால் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று பாகிஸ்தான் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
Categories: flood India's help, PAKISTAN FLOODS
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *