தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாமக சார்பில் தமிழகம் மற்றும்
புதுச்சேரியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கு புதுச்சேரியில் ஆளும் காங்.,யும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனால்
புதுச்சேரியில் பஸ்கள் இயக்கப்படவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கடலூரில் 50,000 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபரம்
மாவட்டம் மதராந்தகத்தில் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி,
வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் அரசு பஸ்களின் கண்ணாடிகள்
உடைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *