தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 2ல் – ஓய்வு – அடுத்த நீதிபதி யார் சட்ட அமைச்சகம் ஆலோசனை

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அக்டோபர் 2ம் தேதி ஓய்வு பெற
உள்ள நிலையில், அப் பதவிக்கு தகுதியான நீதிபதியின் பெயரைப்
பரிந்துரைக்கும்படி மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேட்டுக்
கொண்டுள்ளார்.

மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகய்தான் முறைப்படி தலைமை
நீதிபதியாக பதவி உயர்வு பெறவேண்டும். 2019 நவம்பரில் ஓய்வு பெற உள்ள அவர்,
தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய நான்கு நீதிபதிகளில்
ஒருவர். அதனால், அவரது பெயரை தலைமை நீதிபதி பரிந்துரைப்பாரா என்ற
கேள்வி எழுந்துள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக யாரை நியமிப்பது என்பது
குறித்து சட்ட அமைச்சகம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் ஆலோசனை நடத்தி
வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *