2021 வாக்கு எண்ணப்படுவது எப்படி..??

ஒவ்வொரு மேஜையிலும் தேர்தல் பணி மேற்கொள்ளும் ஒரு அலுவலர் இருப்பார்…
ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் 14 முகவர்களும் ஒரு முதன்மை முகவரும் அனுமதிக்கப்படுவார்கள்…
மேஜையில் குறிப்பிட்ட சட்டப்பேரவை தொகுதிக்கான இயந்திரம் மட்டுமே வைக்கப்படும்…
பதிவான மொத்த வாக்குகள் மற்றும் பிற விவரங்கள் கட்டுப்பாட்டு இயந்திரத்தில் பதிவாகி இருக்கும்…
வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகள் திரையில் தெரியும்…
வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகள் அறிவிக்கப்பட்ட பிறகு, நோட்டா வாக்குகள் அறிவிக்கப்படும்…
14 மேஜைகளிலும் அடுத்த சுற்றுக்கான கட்டுப்பாட்டு இயந்திரம் வைக்கப்படும்…
வாக்கு சாவடி எண்ணிக்கையை பொறுத்து சுற்றுகளின் எண்ணிக்கை மாறுபடும்…
15 முதல் 30 வரை செல்ல வாய்ப்புகள் உண்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *