காபூலில் அரசு அதிகாரிகள் சென்ற பேருந்து மீது குண்டுவெடிப்பு

    நவம்பர் 2 காலை நேரத்தில்,  அரசு கட்டிடத்தின் முன் தலிபான் ஊழியர்களை ஏற்றிச் சென்ற மினிபஸ்ஸை குறிவைத்து குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் புதன்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் காயமடைந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காபூல் பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை குறிவைத்து  குண்டுவெடித்ததில் எட்டு பேர் காயமடைந்ததாக TOLO செய்தி தெரிவிக்கிறது. ஊடக அறிக்கைகளின்படி, போலிசார் அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளனர் மற்றும் குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு ஊடகவியலாளர்கள் உட்பட மக்கள் நுழைய தடை விதித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *